×

அதிமுகவில் இருண்ட ஆட்சியில் இருந்து விடுபட்டு விடியல் ஆட்சி கண்ட தமிழ்நாட்டு மக்கள் நலமாகவே இருப்பார்கள்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பதில்

சென்னை: அதிமுகவில் இருண்ட ஆட்சியில் இருந்து விடுபட்டு விடியல் ஆட்சி கண்ட தமிழ்நாட்டு மக்கள் என்றும் நலமாகவே இருப்பார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்;

எதிர்கட்சித் தலைவர், தான் நலமாக இல்லை என்று முதல்வருக்கு முறையிட்டிருக்கிறார்!

விவசாயிகளை வஞ்சித்த வேளாண் சட்டங்களுக்கு முட்டு கொடுத்த நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்?

பதவியைக் காப்பாற்றுவதற்காக பா.ஜ.க.வுடன் சேர்ந்து தமிழ்நாட்டிற்கு பச்சைத் துரோகம் செய்த நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்?

தூத்துக்குடியில் மக்களைக் குருவிகளைப் போல சுட்டுத் தள்ளிய ஆட்சி நடத்திய நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்?

பொள்ளாச்சி இளம்பெண்களை சீரழித்த கொடூரன்களுக்கு பாதுகாப்பு அளித்த நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்?

சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிரான CAAவுக்கு ஆதரவு தெரிவித்த நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்?

கொரோனாவில் ப்ளீச்சிங் பவுடர் வரை கொள்ளையடித்த ஆட்சி நடத்திய நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்?

கட்சித் தலைவி வாழ்ந்த கொடநாட்டிலேயே கொலையும் கொள்ளையும் நடக்க விட்ட நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்?

உங்களின் இருண்ட ஆட்சியிலிருந்து விடுபட்டு விடியல் ஆட்சி கண்ட தமிழ்நாட்டு மக்கள் இன்றும் என்றும் நலமாகவே இருப்பார்கள், திராவிட மாடல் ஆட்சியில் என்று அவர் கூறியுள்ளார்.

The post அதிமுகவில் இருண்ட ஆட்சியில் இருந்து விடுபட்டு விடியல் ஆட்சி கண்ட தமிழ்நாட்டு மக்கள் நலமாகவே இருப்பார்கள்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பதில் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,AIADMK ,Minister ,D.R.P.Raja ,CHENNAI ,Industries ,T.R.P.Raja ,Edappadi Palaniswami ,
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...